சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அம்சமாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் ”உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பிரதிநிதித்துவம்” வழங்க சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலர்களாக நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு பாராட்டு குவிகிறது appeared first on Dinakaran.