சென்னை: 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை கவுரவிக்கிறார் த.வெ.க தலைவர் விஜய். இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு சிறப்பு செய்கிறார். இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். 18 மாவட்டங்கள் உட்பட 88 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களுக்கு பரிசு அளிக்கவுள்ளார். முதல் 3 இடங்கள் மட்டுமில்லாமல் கடின உழைப்பின் மூலம் தேர்ச்சி பெற்ற சில மாணவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்குகிறார். மாணவ, மாணவர்களை அழைத்து வரும் வாகன செலவு உள்ளிட்ட அனைத்தையும் தவெக ஏற்று நடத்துகிறது.
The post 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை கவுரவிக்கிறார் த.வெ.க தலைவர் விஜய் appeared first on Dinakaran.