மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் கலெக்டர் ஆய்வு

5 months ago 11

திருப்பூர், ஜன.23: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயன்பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் திருப்பூர் மாநகராட்சி, அரண்மனைப்புதூர் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். இந்த முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவம், நரம்பியல் மருத்துவர், காது, முக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து தகுதிகளின் அடிப்படையில் சான்றுகள் வழங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உதயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், உதவி திட்ட அலுவலர் (பள்ளி கல்வித்துறை) அலி அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வி) பாலசுந்தரி, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

The post மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article