மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

1 week ago 4

சென்னை: “மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.” என்று மாற்றுத் திறனாளிகளை சர்ச்சைக்குரிய பதம் கொண்டு அழைத்தமைக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டும் அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார் கலைஞர். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

Read Entire Article