திருப்பூர், பிப்.24: திருப்பூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், 11வது வார்டு திமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று திலகர் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயருமான தினேஷ்குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி, 15.வேலம்பாளையம் பகுதிக் கழக செயலாளர் ராமதாஸ், மாணவரணி அமைப்பாளர் திலகராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், திமுக நிர்வாகி தம்பி.வெங்கடாசலம், கோட்டாபாலு, வார்டு செயலாளர் அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.