மதுரை: மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் நாட்டில் பிளவுவாத அரசியலை கட்டமைக்கின்றனர் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பொதுக் கூட்டம், மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுச் செயலாளர் சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றார். மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், கே. பாலகிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பேசினர்.