சேலம், பிப்.5: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, சேலம் சூரமங்கலம் தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். அலுவலக செயலாளர் சந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாநகர குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கனகராஜ், ஞானசுந்தரி, வெற்றிச்செல்வன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், சேலம் வடக்கு மாநகர குழு சார்பில், ஐந்து ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் நடந்தது. மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
The post மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.