மார்கழி பஜனை பாடுவதில் சிறுவர்கள் ஆர்வம்

4 months ago 11

 

காஞ்சிபுரம்: மார்கழி மாதத்தில் தெருக்கள் கோலங்கள், விளக்குகள் மற்றும் பஜனை இசையுடன் களைகட்டும். அந்த வகையில் தெருக்களில் பஜனை பாடும் வழக்கம், நம் முன்னோர்களின் கலாச்சாரத்தில் ஒன்றாகும். தற்போதைய, தலைமுறைகளில் மார்கழி மாதத்தில் தெருக்களில் பஜனை பாடுவது தற்போது குறைந்து வருகிறது.

ஆனால், மார்கழி மாதத்தில் பஜனைப்பாடும் பழகத்தை விட்டு விடாமல் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆனைப்பள்ளம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மட்டும் சுமார் 25 பேர் இந்த மார்கழி மாதத்தில் தொடர்ந்து பஜனை பாடி வருகின்றனர்.கிராமத்தில் 50 வருடங்களுக்கு மேலாக மார்கழி பஜனை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பெரியோர்கள் தற்போது யாரும் இல்லாத நிலையிலும் அதனை தொடர்ந்து விடாமல் இருக்க திருப்பாவை பாடல்கள் மற்றும் கிருஷ்ணர் பாடல்களை பாடி இந்த அதிகாலை வேளையில் தினமும் பஜனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மார்கழி பஜனை பாடுவதில் சிறுவர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Read Entire Article