மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை

4 months ago 14

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் மார்கழி பிறப்பையொட்டி, மாதம் முழுவதும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மார்கழி பிறப்பையொட்டி மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் நேற்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உற்சவர், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர், ஸ்ரீதேவி-பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதையடுத்து, உற்சவருக்கு ‘மார்கழி மாதம்’ என எழுதப்பட்ட பட்டை அணிவிக்கப்பட்டது. இதில், ஆண்டாள் பக்தர்கள், ஓம் சக்தி மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதேபோல், 62வது திவ்ய தேசமாக திகழும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உற்சவர், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

* பஜனை பாடல்கள்
மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணர் கோயில் பஜனை குழுவினர் மற்றும் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாடிக் கொண்டு தெருக்களில் நடந்து சென்றனர்.

The post மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article