மானூரில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது

1 week ago 4

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், உசிலங்குளம், கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 45), மானூர், மேலபிள்ளையார்குளத்தில் உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ம்தேதி கருப்பசாமி தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான வேலை செய்ய தேவையான இரும்பு பிளேட்டுகள் (சுமார் 1,500 கிலோ எடை கொண்ட) எடுத்து வைத்து விட்டு சென்றுள்ளார். பின்பு கடந்த 22ம்தேதி காலை கருப்பசாமி கம்பெனியில் வந்து பார்த்தபோது மேற்சொன்ன இரும்பு பிளேட்டுகளை காணவில்லை.

இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தெற்கு பணவடலிசத்திரம், மேலத் தெருவை சேர்ந்த கார்த்திக்(29), சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிரி பத்மநாதன்(18), மகேந்திரன்(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Read Entire Article