தமிழகத்தையே அழவைத்த ரிதன்யாவின் கடைசி சிரிப்பு.. நெஞ்சை உலுக்கும் காட்சி

5 hours ago 3

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபர். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர்களுடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக அண்ணாதுரை கூறியுள்ளார். முதற் கட்டமாக திருமணத்தின் போது, 100 பவுன் நகையும், ரூ.62 லட்சத்தில் சொகுசு காரும் வாங்கி கொடுத்து உள்ளனர்.

அதன்பிறகு 200 பவுன் நகையை எப்போது கொடுப்பார்கள் என்று கவின்குமார் மனைவியிடம் கேட்டு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாமனார், மாமியாரும் சேர்ந்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த ரிதன்யா கடந்த 28-ந்தேதி வீட்டை விட்டு காரில் சென்று, செட்டிபுதூர் பகுதியில் விஷம் குடித்து, காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர்.

இந்தநிலையில், ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை அழ வைத்த ரிதன்யா கடைசியாக சிரித்த முகத்துடன் புது காரில் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

ரிதன்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களில் அவர் சிரித்தபடி இருப்பது அவரது கடைசி சிரிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article