மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்ட போராட்ட குழு வலியுறுத்தல்

9 hours ago 3

சென்னை: சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றுக்கு பிறகு பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்பது வருத்தமான உண்மை. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட ரூ.40 ஆயிரம் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு தரப்படுகிறது.

Read Entire Article