மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி; மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 day ago 3

சென்னை: ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழினத்தை உயர்த்த முடியும் என முதலமைச்சர் கூறியிருந்தார். ஆளுநருக்கு எதிரான வழக்கில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

நீதிமன்ற ஒப்புதலை அடுத்து பல்கலை. மசோதாக்கள் சட்டமானதன் மூலம் துணைவேந்தர் நியமன அதிகாரம் அரசின் வசம் சென்றது. இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர்; தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது

The post மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி; மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article