மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் இல்லத்துக்கான பாதுகாப்பு வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

3 months ago 14

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத் தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார்.

கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.மணிக்குமார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறி பாமக வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

Read Entire Article