மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

5 hours ago 2

சென்னை: தலைமை கணக்​குத் தணிக்கை அதி​காரி​யின் மாநில நிதி தணிக்கை அறிக்​கை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் நேற்று சமர்ப்​பிக்​கப்​பட்​டது. தமிழக அரசின் கணக்​கு​கள் குறித்த தணிக்கை அறிக்​கையை மாநில ஆளுநருக்கு அளிக்க இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் பிரிவு 151(2)- வகை செய்​கிறது. இந்த அறிக்கை மாநில சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​படு​கிறது.

அதன்​படி, 2023-24 நிதி ஆண்​டுக்​கான தலைமை கணக்​குத் தணிக்கை அதி​காரி​யின் மாநில நிதி தணிக்கை அறிக்​கை, சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​வதற்​காக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் நேற்று சமர்ப்​பிக்​கப்​பட்​ட​தாக முதன்மை தலைமை கணக்​காளர் டி. ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார்​.

Read Entire Article