மாநில எல்லையோரங்களில் அரிசி கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

1 week ago 3

சென்னை: தலைமை செயலகத்தில் உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். மாநில எல்லையோரங்களில் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திடவும், டீசல் கலப்பை நிறுத்திட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன், மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநில எல்லையோரங்களில் அரிசி கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article