மாநில அளவிலான வாள் சண்டை போட்டி ஏ.பி.ஜே.எம். பள்ளி மாணவனுக்கு 2 தங்க பதக்கம்

3 hours ago 1

கருங்கல், பிப்.8: குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினவிழாவினை முன்னிட்டு மாநில பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் கருங்கல் அருகே சூசைபுரம் ஏ.பி.ஜே.எம். பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஏ.பி.ஜே.எம் பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் ஜோஷிக் ஸ்டெபின்டோ குழு மற்றும் தனிநபர் பிரிவினில் தங்கப் பதக்கமும், 12ம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக், ஜோயல் ஆஸ்டின் மற்றும் ஜெனித் ஆகியோர் குழு விளையாட்டில் வெள்ளிப் பதக்கமும் 8-ம் வகுப்பு மாணவி பிரதிஷா குழு போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், பள்ளி முதல்வர் அருட்சகோதரி டெசி, அருட்தந்தை ஷிஜோ, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்தினர்.

The post மாநில அளவிலான வாள் சண்டை போட்டி ஏ.பி.ஜே.எம். பள்ளி மாணவனுக்கு 2 தங்க பதக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article