மாநில அளவிலான கலைத்திருவிழா நெட்டூர் அரசு பள்ளி முதலிடம்

4 months ago 14

மானூர், ஜன.13: மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித்தலைமை ஆசிரியர் சங்கர், பயிற்சி ஆசிரியர் பால்வண்ண நாதன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் வெகுவாக பாராட்டினர். இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாநில அளவிலான கலைத்திருவிழா நெட்டூர் அரசு பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article