மதுரை, ஜன. 18: மதுரை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பாக, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த பென்னிகுக் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மதுரை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமை வகித்து. பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வ.வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் அணி மாநகர் மாவட்ட அமைப்பாளர் காவேரி சொக்கலிங்கம் வரவேற்றார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஒச்சுபாலு, மூவேந்திரன், ராகவன், இளைஞரணி அமைப்பாளர் சௌந்தரராஜன் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
The post மாநகர் மாவட்ட திமுக சார்பில் பென்னிகுக் பிறந்த நாள் விழா: கோ.தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்தார் appeared first on Dinakaran.