திருவெறும்பூர் அருகே மாடு மீது பைக் மோதல்

3 hours ago 2

 

திருவெறும்பூர், பிப்.5: திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி தொண்டமான் பட்டியை சேர்ந்தவர் விக்டர் ஞானபிரகாசம் இவரது மகன் டேவிட் ராஜ் (25) இவர் திருச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது எழில் நகர் உய்யக்கொண்டான் கரையில் பைக்கில் சென்றபோது, ரோட்டில் படுத்து கிடந்த மாட்டின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேவிட்ராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டேவிட்ராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே மாடு மீது பைக் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article