சென்னை: மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.