
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பஸ் நிலையம் துணை மின்நிலையங்களில் நாளை (12.6.2025, வியாழன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பின்வரும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை:
மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரிரோடு, தெற்கு பைபாஸ்ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார்திடல், ஜின்னாதிடல், டவுன்ரோடு, அண்ணாவீதி, பஷீர்அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத்ரோடு, PSN கல்லூரி, ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, ராஜராஜேஸ்வரிநகர், என்.ஜி.ஓ.பி. காலனி, சேவியர் காலனி, பெருமாள்புரம், தாமஸ் தெரு, சென்மேரிஸ் தெரு, பாரதிநகர், பொதிகைநகர், டிரைவர்ஸ் காலனி ஏ காலனி 1 முதல் 6 தெரு வரை, 14வது தெரு, உதயாநகர், நியூகாலனி, டீச்சர்ஸ்காலனி, தமிழ்நகர், கிருஷ்ணாநகர், ஜெயில்சிங்நகர், திருமால்நகர் மகிழ்ச்சிநகர், அழகர்நகர், என்.ஜி.ஓ.ஏ. காலனி 7 முதல் 14வது தெரு, கனராபேங்க் காலனி, ராமச்சந்திரநகர், ராமச்சந்திராகார்டன், மர்பிநகர், பங்கஜநகர், நேருநகர், சந்தோஷ்நகர், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை (12.6.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே அதன்படி திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை:
நாளை (12.6.2025, வியாழக்கிழமை) வள்ளியூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் செம்பாடூ மின் பாதையில் அவசர கால பணிகள் செய்ய வேண்டி இருப்பதால் தெற்கு வள்ளியூர், வள்ளியம்மாள்புரம், மடப்புரம், முத்துராஜபுரம், கிழவனேரி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.