மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்!

5 hours ago 2

சென்னை : கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சர்​வ​தேச அளவி​லான வேலை​வாய்ப்பு இணை​யதள​மான இன்​டீட், ‘இன்​னாகுரல் பேமேப் சர்​வே’ என்ற பெயரில் ஆய்வு மேற்​கொண்​டது. பல்​வேறு துறை சார்ந்த நிறு​வனங்​களின் 1,311 அதி​காரி​கள் மற்​றும் 2,531 ஊழியர்​களிடம் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. அதில், சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) ஆரம்ப கால சம்பளம் ரூ.30,000 வரை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

மும்பை, ஐதராபாத்தில் ரூ.28,500, பெங்களூரு ரூ.28,400 என ஆரம்ப கால சம்பளமாக தரப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. மென்​பொருள் மேம்​பாடு முதல் பொறி​யாளர்​கள் வரை பல்​வேறு பணி​களில் சேரும் புதி​ய​வர்​கள் சராசரி​யாக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30,500 வரை சம்​பளம் பெறுகிறார்​கள். 2-5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் மாதம் ரூ.43 ஆயிரம் முதல் ரூ.48,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள். 5 -8 ஆண்டுகள் வரை அனுபவம் உடையவர்கள் மாதம் ரூ.64 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர். குறிப்பாக ஹைத​ரா​பாத்​தில் 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்​ளவர்​கள் மாதம் ரூ.69,700 வரை சம்​பளம் பெறுகின்​றனர்.

The post மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்! appeared first on Dinakaran.

Read Entire Article