வந்தவாசி, பிப்.15: வந்தவாசி அருகே நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஸ்டாகிராம் காதலன் மீது போலீசார் போக்சோ வழக்கில் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி, நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவ்வப்போது நேரில் வந்து சந்தித்துள்ளார். மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் சோர்வாக காணப்பட்டதால், பெற்றோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மீது நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகிறார்.
The post மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஸ்டாகிராம் காதலன் போக்சோ வழக்கில் வலை appeared first on Dinakaran.