மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

2 months ago 8

திருச்செங்கோடு, நவ.26: திருச்செங்கோடு கைலாசம்பாளையம் ஊராட்சி, குப்பாண்டபாளையம் அருகேயுள்ள அப்பூர்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன்(32). திருமணம் ஆகாதவர். இவர் பக்கத்து வீட்டில் வசித்து வரும், கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் 17வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மோகனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article