மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - யார் அந்த சார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது: எல்.முருகன் கேள்வி

4 months ago 10

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற சம்பவம் நம் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. திமுக அரசு ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறதே தவிர, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களது கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்.

Read Entire Article