சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற சம்பவம் நம் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. திமுக அரசு ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறதே தவிர, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களது கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்.