ஊட்டி, ஏப். 29: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில் 2025-2026ம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 17.04.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 05.05.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 07.05.2025 அன்று காலை 7 மணியளவில் ஆண்களுக்கும், 08.05.2025 அன்று காலை 7 மணியளவில் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ளலாம்.
இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) மற்றும் கையுந்து பந்து ஆகிய தேர்வு போட்டிகள் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கம், ஊட்டியில் ஆண்களுக்கு 07.05.2025 பெண்களுக்கு 08.05.2025 நடைப்பெறும். மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்படும். மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.05.2025 அன்று காலை 7 மணி அளவில் வாள்விளையாட்டு (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஜூடோ (ஆண்கள் மற்றும் பெண்கள், குத்துச்சண்டை (ஆண்கள்) ஜவஹர்லால் நேரு, விளையாட்டரங்கம், சென்னையில் நடக்கும்.
பளுதூக்குதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஊஷூ (ஆண்கள் மட்டும்), அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரில் நடக்கும். நீச்சல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஏஜிபி., அரங்கம், வேளச்சேரி, சென்னையிலும் நடக்கிறது. குத்துச்சண்டை (பெண்கள்), ஸ்கூவாஸ் (ஆண்கள் மட்டும்) ஜவஹர்லால் நேரு, உள் விளையாட்டரங்கம், சென்னையிலும் நடக்கிறது. கைப்பந்து (ஆண்கள் மற்றும் ெபண்கள்), அண்ணா விளையாட்டரங்கம், திருச்சியில் 12.05.2025 ஆண்கள் காலை 7.00 மணிக்கும், 13.05,2025 பெண்கள் காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. மல்யுத்தம் (ஆண்கள் மட்டும்), டேக்வாண்டோ (ஆ மற்றும் பெண்கள் மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரில் நடக்கிறது. மல்லர்கம்பம் (ஆண்கள் மட்டும்) மாவட்ட விளையாட்டரங்கம், விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
இதில், கலந்து கொள்ள தேவைனயான தகுதிகள்: தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதங்கங்கள் பெற்றவர்களும் மற்றும் கலந்து கொண்டவர்களும் மாவட்ட, மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி ஆவார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post மாணவர்கள் விளையாட்டு விடுதியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.