திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் இந்த வருடம் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மிகக் கொடுமையான முறையில் ராகிங் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாநில மனித உரிமை ஆணையமும், தேசிய மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோட்டயம் அரசு நர்சிங் கல்லூரி முதல்வர் சுலேகா மற்றும் விடுதி உதவி வார்டனும், பேராசிரியருமான அஜீஸ் பி. மாணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதி காவலர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
The post மாணவர்களுக்கு ராகிங் கொடுமை கோட்டயம் கல்லூரி முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.