மழை, வெள்ள பேரிடர்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

4 months ago 34

சென்னை: மழை, வெள்ள பேரிடர்களை முழுமையாக எதிர்கொண்டு மக்களை காப்பாற்ற, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் 3-வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுகாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பல்வேறு துறைகளின் செயலர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read Entire Article