மழை நீரில் மூழ்கும் சாலைகளால் தவிக்கும் அத்திப்பட்டு - ராம்பூர்ணம் நகர் விரிவாக்க பகுதி மக்கள்

5 months ago 20

சென்னை புறநகர் பகுதி​களான அம்பத்​தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்​பட்டு, அயப்​பாக்​கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்​பாக்​கம், கீழ் அயனம்​பாக்கம் பகுதி​களில் தொழிற்​சாலைகளுக்கு இணையாக குடி​யிருப்பு​களும் அதிகள​வில் உள்ளன. மேல்​அயனம்​பாக்கம் மற்றும் அத்திப்​பட்டு பகுதி​களில் இயங்​கும் பிரபலமான தனியார் பள்ளி​களில் சுற்று​வட்டார பகுதி​களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

முகப்​பேர், நொளம்​பூர், மதுர​வாயல் மற்றும் வானகரம் பகுதி​களில் இந்த பள்ளி​களுக்கு செல்ல மாந்​தோப்பு சாலை​யும், மேல்​அயனம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வேற்​காடு செல்​லும் சாலை​யும் பிரதானமாக உள்ளது. இதேபோல அத்திப்​பட்டு, ஐசிஎப் காலனி, அம்பத்​தூர் பகுதி​யில் வசிப்​பவர்​களுக்கு செட்​டிதெரு வழியாக செல்​லும் அயப்​பாக்கம் சாலை​யும், செல்​லி​யம்மன் நகர், ராம்​பூர்ணம் நகர் விரிவாக்​கம், ஜேஆர் கேஸ்​டில் டவுன், நியூ சென்னை சிட்டி வழியாக மேல்​அயனம்​பாக்கம் நோக்கி செல்​லும் குறுகலான சிமெண்ட் கால்​வாய் சாலை​யும் பிரதானமாக இருந்து வருகிறது. பள்ளி வேளை​களில் இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்​கணக்கான வாகனங்கள் செல்​கின்றன.

Read Entire Article