மளிகைக் கடை மீது தாக்குதல்

4 months ago 14

மதுரை, அனுப்பானடியில் உள்ள தெய்வகன்னி தெருவைச் சேர்ந்தவர் முத்துரத்தினம் (37). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் வந்த செந்தில்குமார் என்ற வாலிபர், கடைமுன் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை முத்துரத்தினம் கண்டித்துள்ளார். இதில், கோபமடைந்த செந்தில்குமார், அவரது தாய் சோனையம்மாள், தங்கை பிரியா, நண்பர் கருப்பு ஆகியோருடன் இரவு கடைக்கு வந்து முத்துரத்தினத்தை தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இதில், படுகாயமடைந்த முத்துரத்தினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமார் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

The post மளிகைக் கடை மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article