மலப்புரத்தில் மதம் பிடித்த யானை: 17 பேர் காயம்

4 months ago 14

திருவனந்தபுரம்: மலப்புரத்தில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மலப்புரம் திரூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்தது. மதம் பிடித்த யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து 17 பேர் காயமடைந்தனர். யானை தும்பிக்கையால் பக்தர் ஒருவரை தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார். பலத்த காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post மலப்புரத்தில் மதம் பிடித்த யானை: 17 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article