சேலம்: “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கொள்கையால் தென்மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதால், அபாய மணியை ஒலித்து முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,” என்று சேலம் எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையால், இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அபாய மணியை ஒலிக்கவிட்டு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுவரையறை செய்யும் போது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது.