மருந்து குடித்து விவசாயி சாவு

3 months ago 13

 

குன்னம், டிச. 8: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியவெண்மணி கிராமம் வடக்கு தெரு சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (60) விவசாயி. இவர், குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் மாலை தனது வயலில் பூச்சி மருந்து குடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கணேசன் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ராஜா, வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

The post மருந்து குடித்து விவசாயி சாவு appeared first on Dinakaran.

Read Entire Article