மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அமித்ஷா கோரிக்கை

1 week ago 1

தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் கல்வி கற்கும் நடைமுறையை, மாநில அரசு கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் ராஜாதித்யா சோழன் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 56 - வது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் எழுச்சி தின விழா வெகு விமரிசையாக நேற்று ( 7-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

Read Entire Article