மருதமலையில் 9-ந் தேதி பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை

11 hours ago 7

கோவை,

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 9-ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் அதிக அளவில் மருதமலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்க வருகிற 9-ந் தேதி மருதமலை மலைப்பாதையில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பஸ்களிலும் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Read Entire Article