தேனி, ஜூலை 6: தேனி நகர் பள்ளி ஓடைத் தெருவை சேர்ந்தவர் ராஜா (58). இவரும், இவரது மனைவி கருப்பம்மாளும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ராஜா வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது, வீட்டிற்கு அருகேயே திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படடது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருப்பம்மாள் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post மயங்கி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி appeared first on Dinakaran.