மயக்கவியல் நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும்: துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிவுறுத்தல்

4 months ago 21

சென்னை: மன அழுத்தம், நீண்ட பணி, உடல் சோர்வால் சவால்களை எதிர்கொள்ளும் மயக்க மருந்து நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி (நேற்று) உலக மயக்கவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக மயக்கவியல் தினத்தை முன்னிட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மயக்கவியல் துறை மற்றும் இந்திய மயக்கவியல் நிபுணர் சங்கத்தின் சென்னை மாநகர கிளை இணைந்து தொடர் மருத்துவக் கல்வி பயிலரங்கத்தை மருத்துவமனையில் நடத்தியது.

Read Entire Article