சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தலைமையகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீஃபா, மாநில அமைப்பு செயலாளர்கள் புதுமடம் ஹலீம் பழனி ஃபாருக், தலைமை பிரதிநிதிகள் அப்துல் சலாம், அபிராமம் அப்துல் காதர், சிராஜ், தைமியா மற்றும் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
The post மமக 17ம் ஆண்டு தொடக்க விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.