விசாகப்பட்டினம்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடியோகாசனங்களை செய்தார். மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது என பிரதமர் மோடி பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடியோகாசனங்களை செய்தார். விசாகப்பட்டினத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி; “யோகாவின் பயணத்தைப் பார்க்கும்போது, எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முன்மொழிந்த நாள், பின்னர் மிகக் குறுகிய காலத்தில் உலகின் 175 நாடுகள் எங்கள் திட்டத்திற்கு ஆதரவாக நின்றன.
இன்று முழு உலகம் பல பகுதிகளில் பதற்றம், அமைதியின்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காலங்களில், யோகா நமக்கு அமைதியின் திசையை அளிக்கிறது. மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” என பேசினார்.
The post மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.