
சென்னை,
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி:
தி.மு.க.வினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்..? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி:
மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்..?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா..?
மூன்றாவது கேள்வி:
யார் அந்த சூப்பர் முதல்-அமைச்சர்..?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.