மத்திய அரசை கண்டித்து இன்று​முதல் தொகுதிதோறும் பொதுக்கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

13 hours ago 3

சென்னை: திமுக இளைஞரணி சார்​பில் மத்திய அரசை கண்டித்து இன்று​ முதல் தொகு​திதோறும் பொதுக்​கூட்டம் நடத்​தப்​படும் என துணை முதல்​வரும் அக்கட்​சி​யின் இளைஞரணி செயலா​ள​ருமான உதயநிதி அறிவித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்​துள்ள அறிக்கை​: திமுக இளைஞரணி​யின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்​பாளர், துணை அமைப்​பாளர்கள் ஆலோசனை கூட்​டம் அன்மையில் நடந்தது. இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின் அடிப்​படை​யில், புதிய கல்விக்​கொள்கை மூலம் இந்தியை திணிக்​கும், நிதி​நிலை அறிக்கை​யில் தமிழகம் என்ற பெயரை முற்றி​லுமாக புறக்​கணித்து நிதிப் பகிர்​வில் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்​பில் தமிழகத்தை வஞ்சித்து அநீதி இழைக்​கும் மத்திய அரசை கண்டிக்​கும் வகையில் சட்டப்​பேரவை தொகு​திதோறும் கண்டனப் பொதுக்​கூட்​டங்கள் நடைபெறுகின்றன.

Read Entire Article