மத்திய அரசு நிவாரணம் கிடைப்பதில் தாமதம்: நிதி நெருக்கடியால் புதுச்சேரியில் கட்டணங்கள் உயர்வு

4 months ago 13

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடுத்ததால் ரூ. 177 கோடி செலவாகி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது புதுச்சேரி. இந்நிலையில், மத்திய அரசின் நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து மதுபான உரிமக்கட்டணமும் உயர்கிறது. டூவீலர், கார் பதிவு கட்டணமும் அதிகரிக்கவுள்ளது.

ஃபெஞ்சல் புயல், அணைகள் திறப்பால் கிராமப்பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் புதுச்சேரி மக்கள் இம்முறை கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி நிவாரணங்களை அறிவித்தார். முதல் கட்டமாக 3.54 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தரப்பட்டது. இதனால் ரூ. 177 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

Read Entire Article