மத்திய அரசு தொடங்கிய வக்பு இணையதளம் சட்ட விரோதமானது- ஜவாஹிருல்லா

6 hours ago 2

சென்னை ,

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் .எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.இந்த நிலையில் மத்திய அரசு "வக்பு உமித் இணையதளத்தை கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானது ஆகும். மேலும், இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்பு நிர்வாகிகளும், மாநில வக்பு வாரியங்களும் இந்த இணையதளம் வழியாக வக்பு சொத்துக்களைப் பதிவு செய்வதை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு வக்பு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Read Entire Article