‘மத்திய அரசின் சுங்கக் கட்டண உயர்வு சட்டப்பூர்வ கொள்ளை’ - முத்தரசன் கண்டனம் 

1 month ago 10

சென்னை: “மத்திய அரசு அறிவித்துள்ள சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்”, என வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசு நவ தாராளமயக் கொள்கையை ஏற்று, தனியார்மயத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நான்கு வழி, ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள் என்ற கட்டமைப்பு திட்டங்கள் தனியார் வசம் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல்(பிஓடி) திட்டத்தின் கீழ் ஒப்படைத்து அவர்களுக்கு சுங்க சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

Read Entire Article