மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

4 days ago 3

சென்னை: ​நா​டாளு​மன்​றத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தமிழக எம்​.பி.க்​கள் குறித்து பேசி​யதற்கு தமிழக காங்​கிரஸ் தலை​வர்செல்​வப்பெருந்​தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

செல்​வப்பெருந்​தகை: நாடாளு​மன்​றத்​தில், தமிழக மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நாடளு​மன்ற உறு​ப்பினர்​களை அநாகரீக​மாக மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசி​யிருப்​பது வன்​மை​யாக கண்​டிக்​கத்தக்​கது. வாக்​களித்து தேர்ந்​தெடுத்த ஒட்டு மொத்த தமிழக மக்​கள் குறித்து தான் இவ்​வகை​யில் பேசி​யுள்​ளார். பாஜக​வினர் கொண்​டு​வரும் அனைத்து மக்​கள் விரோத திட்​டங்​களை, தமிழகத்​தின் நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் கேள்வி கேட்​ப​தால் அதை பொறுத்​துக்​கொள்ள முடி​யாமல் வாய்க்கு வந்​தததை பேசுகின்​றனர். உரிய நேரத்​தில் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்​பார்​கள்.

Read Entire Article