மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

13 hours ago 2

சென்னை,

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"திமுக ஆட்சியில் 175 கோடி அளவிற்கு 134 புதிய தேர்கள் 130 கோயில்களில் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 75 தேர்த்களை புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 5 தங்கத்தேர் அறிவிக்கப்பட்ட நிலையில் பவானியம்மன் கோயிலில் தங்கத் தேர் பக்தர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. 9 கோயில்களுக்கு வெள்ளித்தேர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காளிகாம்பாள், நெல்லையப்பர், திருத்தணி கோயில்களில் வெள்ளித் தேர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தற்போது வரை 3 ஆயிரம் குடமுழுக்குகள் நடைப்பெற்றுள்ளன. இன்று மட்டும் 24 கோயில்கள், 8ம் தேதி 74 கோயில்களில் என இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். 4,000 கோயில்களின் பணிகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.

திருச்செந்தூர் திருக்கோயில் பணிகளைப் பொறுத்தவரை பேருந்து நிறுத்தங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோயிலில் ரூ.400 கோடிக்கான திருப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த மாதத்திற்குள் முடிக்கக் கூடிய திருப்பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்வேறு திட்டமிடல்கள் நடைப்பெற்றுள்ளன. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேர விவகாரத்தில் நீதி அரசுப் பக்கம்தான் உள்ளது.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு, சங்கிகள் நடத்த உள்ள மாநாடு, அரசியல் மாநாடு. அதற்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசியல் தேவைக்காக மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நடத்த கூடிய மாநாடு. தமிழிசை சிறந்த அறிவாளி. அவரது ஆலோசனைகள் மூலம்தான் பாஜக போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியைத் தழுவுகிறது. மத்திய அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை வழங்க வேண்டும்" என்றார்.  

Read Entire Article