மதுரை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர்.
மாநாட்டு திடலில் திரண்ட பக்தர்கள்: மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே மாநாட்டு திடல் பகுதியில் திரண்டனர். அவர்கள் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை தரிசித்தனர்.