ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதலமைச்சர் பாராட்டு

3 hours ago 3

சென்னை: ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி முத்தமிழ்ச்செல்வி.

உயிரை பணையம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.

ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும் – அதில் உள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம்.

தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட – அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதலமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article