மதுரையில் இந்தப் பெருமழைக்கும் சொட்டு தண்ணீர் கூட வராத கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்!

4 months ago 20

மதுரை: பெருமழைக்கு கடந்த ஒரு வாரமாக மதுரை மாநரின் குடியிருப்புகளையும், சாலைகளையும் மழைத் தண்ணீர் சூழ்ந்த நிலையில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால், அங்கு கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கும் அவலம் 70 ஆண்டுகளாக தொடர்கிறது.

கடந்த சில நாட்களாக மதுரை நகர் பகுதியில் பெய்த மழையால் செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஊமச்சிக்குளம் கண்மாய், நாராயணபுரம் கண்மாய் போன்ற நகரின் முக்கிய நீர்நிலைகள் நிரம்பின. இந்தக் கண்மாய்களை முறையாக தூர்வாராததால் நிரம்பியதுபோன்ற தோற்றத்துடன் மறுகால் பாய்ந்து நகருக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால் பல பகுதிகளின் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து தடைபட்டு தெப்பம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Read Entire Article